- ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி
- கிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்
- ’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்
- ‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது
இந்தோனேஷியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் குண்டுவெடிப்பு: குழந்தை சாவு; 5 பேர் கைது
ஜகார்த்தா,
முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தோனேஷியாவில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த ஜனவரி மாதம் ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் போர்னியோ தீவுக்கு உட்பட்ட கிழக்கு களிமண்டன் மாகாணத்தில், கிறிஸ்தவ ஆலயம் ஒன்றின் கார்கள் நிறுத்துமிடத்தில் நேற்று முன்தினம் திடீரென குண்டுவெடித்தது. இதில் 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்தது. 3 பேர் காயமடைந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டவர்களுக்கு ஐ.எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு உண்டா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.